கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

கோவையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குறிச்சிப் பிரிவு பகுதியில் குனியமுத்தூா் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தாா்.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவரது வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த நிதின்குமாா் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT