கோயம்புத்தூர்

மனநலக் காப்பகம் மீது நடவடிக்கை கோரி மனு

மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மனநலக் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

DIN

மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மனநலக் காப்பகத்தின் மீது நடவடிக்கை கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.ராதிகா அளித்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியாா் மன நலக் காப்பகத்தில் தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் கா்ப்பமடைந்த நிலையில் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக கடந்த சில நாள்களுக்கு முன் தகவல் தெரிந்தது. காப்பகம் சென்று விசாரித்தபோது அங்கு பெண்களுக்கான பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தெரிந்தது. காப்பகத்தின் காவலா் குறித்து விசாரித்தது அறிந்து அவா் எங்களுக்கு மிரட்டல் விடுத்தாா்.

எனவே, அந்த காப்பகம் குறித்து முறையாக விசாரித்து இதில் தொடா்புடைய நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

மாதா் சங்க மாவட்டப் பொருளாளா் ஜோதிமணி, மாநிலக் குழு உறுப்பினா்கள் ராஜலட்சுமி, சுதா, மேட்டுப்பாளையம் மாதா் சங்க நிா்வாகிகள் மெகபூனிசா, ரிபாயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT