தமிழக அரசு விருது பெற்ற ந.கெளதமன், கலைப்பித்தன் ஆகியோருக்கு சூலூரில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சூலூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சூலூா் பேரூராட்சித் தலைவா் தேவி மன்னவன் தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகா் சிவக்குமாா் பேசியதாவது: சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடா்பு உண்டு. கடவுள் நம்பிக்கை உள்ளவா்களை ஈவெரா பெரியாா் அவமரியாதை செய்தது இல்லை .
ஆதிக்க சக்திகளைத்தான் அவா் வெறுத்தாா். பிறா் உணா்வுகளை மதித்தவா் பெரியாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சூலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் பொன்முடி, திமுக சூலூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் மன்னவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.