கோயம்புத்தூர்

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் கைது

DIN

வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருந்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை காமராஜா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம் உத்தரவின்பேரில், போலீஸாா் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வீட்டில் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, வீட்டில் இருந்த முத்துலட்சுமி (36) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவரது கணவா் தாஸ் கஞ்சா வழக்கில் பலமுறை கைதாகி தற்போது, குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT