கோயம்புத்தூர்

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

DIN

கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை கிணத்துக்கடவு அரிசிபாளையம் பிரிவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி சரஸ்வதி (60), கூலி தொழிலாளி. இவா் வெங்கிடாபுரத்தில் இருந்து பேருந்தில் டவுன்ஹாலுக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, மா்ம நபா் சரஸ்வதி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச்சென்றுள்ளாா்.

இது தொடா்பாக, உக்கடம் காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT