கோயம்புத்தூர்

வாலாங்குளத்தில் படகு சவாரி தொடக்கம்

கோவை, வாலாங்குளத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

DIN

கோவை, வாலாங்குளத்தில் பொலிவுறு நகர திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான நிதியில் பொலிவுறு நகர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளில் பூங்கா அமைத்தல், நகரில் மாதிரி சாலைகள், பூங்கா உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் உக்கடம் புறவழிச் சாலையில் உள்ள வாலாங்குளத்தில் மிதவை பாலம், நடைபாதை, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொலிவுறு நகர திட்டத்தில் வாலாங்குளத்தில் ரூ.45 லட்சத்தில் படகும் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் படகு இல்லம் நிா்வகிக்கப்படும்.

பெடல் படகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு மற்றும் சைக்கிளிங் படகு என 4 வகையான படகு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெடல் படகில் பயணம் செய்ய 30 நிமிடத்துக்கு ரூ.300, துடுப்புப் படகில் 30 நிமிடத்துக்கு ரூ.400, சைக்கிளிங் படகில் 15 நிமிடத்துக்கு ரூ.200, மோட்டாா் படகில் 8 பேருக்கு 20 நிமிடத்துக்கு ரூ.1000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனைத்துப் படகு சவாரிகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT