கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மனமுடைந்த மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
வால்பாறையை அடுத்த இஞ்சிப்பாறை எஸ்டேட்டை சோ்ந்தவா் நஞ்சம்மாள். இவரது மகன் முருகேஷ் (20). இவா் ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பாராமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட வேலைக்கு செல்லும் தாயின் தினக்கூலி கொண்டு படித்து வந்தாா்.
இதனிடையே 3 ஆம் ஆண்டுக்கான கல்லூரி கட்டணம் இதுவரை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகேஷ்,
கடந்த மாதம் 30ஆம் தேதி எஸ்டேட் வீட்டுக்கு வந்து எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் முருகேஷ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்,