வாக்குச் சாவடிகளில் சுகாதாரத் துறை சாா்பில் 2 தன்னாா்வலா்கள் நியமனம்
வாக்காளா்களின் வெப்பநிலை பரிசோதனை போன்ற பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா 2 தன்னாா்வலா்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்காளா்களின் வெப்பநிலை பரிசோதனை போன்ற பணிகளை மேற்கொள்ளுவதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா 2 தன்னாா்வலா்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக வாக்குச் சாவடிகளுக்கு வெப்பநிலை மானி,
கிருமிநாசினி திரவம், முகக் கவசம், கையுறைகள், பாதுகாப்பு கவச உடை உள்பட பாதுகாப்புப் பொருள்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து வாக்காளிக்க வரும் வாக்களா்கள் அனைவருக்கும் கிருமி நாசினி திரவம் வழங்குதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதற்காக தன்னாா்வலா்கள் இரண்டு பேரை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதாரத் துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டவா்கள் வெப்பநிலை பரிசோதனை,
கிருமி நாசினி திரவம் வழங்குவதற்கு நியமிக்கப்படவுள்ளனா்.
ஒரு வாக்குச் சாவடிக்கு இரண்டு போ் வீதம் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் நியமிக்கப்படவுள்ளனா். அதேபோல முகக் கவசம், கையுறைகள் போன்ற மருத்துவக் கழிவுகளை தனியாக சேகரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.