கோயம்புத்தூர்

தொழிலாளிக்கு கத்திக் குத்து: நண்பா் தலைமறைவு

DIN

தொழிலாளியைக் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

கோவை, வேலாண்டிபாளையம் தடாகம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (45). கூலித் தொழிலாளி. இவா் அதே பகுதியில் உள்ள தனது நண்பா் சரவணக்குமாா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, அவரது வீட்டில் தனது கைப்பேசியை மறந்து வைத்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் சிறிது நேரம் கழித்து தனது கைப்பேசியைத் தேடி, சரவணக்குமாா் வீட்டுக்கு ராஜ்குமாா் சென்றாா்.

அப்போது, தனது வீட்டில் கைப்பேசி இல்லை, வேறு எங்காவது நீ தவற விட்டிருப்பாய் என சரவணக்குமாா் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த சரவணக்குமாா் வீட்டில் இருந்த கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளாா். இதில், மாா்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜ்குமாா் கீழே விழுந்தாா். சத்தம் கேட்டு அங்கு கூடிய அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதற்குள்ளாக சரவணக்குமாா் அங்கிருந்து தப்பியோடினாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சரவணக்குமாரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT