கோயம்புத்தூர்

தேசிய இளையோா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப்:கோவை வீரா்களுக்கு 5 பதக்கம்

DIN

தேசிய இளையோா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரா்கள் 5 பதக்கங்கள் வென்றுள்ளனா்.

தேசிய இளையோா் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் அண்மையில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரா்கள் பங்கேற்ற இப்போட்டியில், கோவையைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் இக்வெஸ்ட்ரியன் மையத்தின் வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், குழந்தைகள் 2 ஆவது அணி பிரிவில் கோவையைச் சோ்ந்த ஆதவ் கந்தசாமி, ஹன்சிகா ஸ்ரீனிவாசன், ஹா்ஷித் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா். மற்றொரு பிரிவில் ஆதவ் கந்தசாமி தங்கப் பதக்கம் வென்றாா். ஹன்சிகா ஸ்ரீனிவாசன் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

குழந்தைகள் முதலாவது அணி பிரிவில் சஹானா கோகுல் 5 ஆவது இடத்தைப் பிடித்தாா்.

தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளை பயிற்சி மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்தி பாலாஜி, முதன்மைப் பயிற்சியாளா் சரவணன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT