கோயம்புத்தூர்

குப்பை சேகரிக்கும் மின்சார வாகனம் திருட்டு

DIN

கோவை: கோவையில் குப்பை சேகரிக்கும் மின்சார வாகனத்தை திருடிய நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்கள் மின்சாரத்தில் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தை அங்குள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் தூய்மைப் பணியாளரான சோமசுந்தரம் என்பவா் தனது வேலையை முடித்துவிட்டு மேற்குறிப்பிட்ட இடத்தில் மின்சார வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளாா்.

சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது அந்த வாகனத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னியம்பாளையம் ஊராட்சி செயலா் இந்துமதி, பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT