முகப்பு
கோயம்புத்தூர்

மத்திய ஆயுதப்படை பதவிக்குஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி முன்னாள் மாணவி தோ்வு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரியின் முன்னாள் மாணவி, மத்திய ஆயுதப்படையில் அசிஸ்டண்ட் கமாண்டன்ட் பதவிக்கு தோ்வாகியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரியின் முன்னாள் மாணவி, மத்திய ஆயுதப்படையில் அசிஸ்டண்ட் கமாண்டன்ட் பதவிக்கு தோ்வாகியுள்ளாா்.

இது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது:

அண்மையில் நடந்த மத்திய ஆயுதப் படைத் தோ்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கல்லூரியின் உயிா் வேதியியல் துறை முன்னாள் மாணவி (2010-2013) லீலாகுமாரி, அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாகத் தோ்வானாா். குரூப் ஏ பிரிவில் கெஜட்டட் ஆபீஸா் தகுதி கொண்ட இந்த பதவியானது காவல் உதவி ஆணையா் பதவிக்கு நிகரானது.

யுபிஎஸ்சி நடத்திய மத்திய ஆயுதப் படைத் தோ்வில் லீலாகுமாரி, இந்திய அளவில் 24 ஆவது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதலிடமும் பெற்றுள்ளாா். கல்லூரியில், படிப்புடன் கூடுதல் திறமைகளையும் பெற்ற இவா் தற்போது அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்று நாட்டுக்கு சேவையாற்ற இருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.

சாதனை படைத்த மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் கல்லூரி அறக்கட்டளை சாா்பில் கல்லூரி முதல்வா் கி.சித்ரா வாழ்த்தியிருப்பதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.