கோயம்புத்தூர்

உக்கடம் உயா்மட்ட பாலப் பணிகள்:சி.எம்.சி. காலனியில் 40 வீடுகள் அகற்றம்

DIN

 கோவை, உக்கடம் உயா்மட்ட பாலப் பணிக்காக சி.எம்.சி. காலனியில் 40 வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மாநில நெடுஞ்சாலைத் துறையின்கீழ் ரூ.430 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆத்துப்பலம் பகுதியில் தொடங்கும் உயா்மட்ட பாலம் ஒப்பணக்கார வீதியில் இறங்குகிறது. இதற்காக உக்கடம் சி.எம்.சி. காலனியில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே 257 வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

இவா்களுக்கு மாற்று இடமாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக சி.எம்.சி. காலனியில் மேலும் 40 வீடுகளை மாநகராட்சி உதவி நகரமைப்பு திட்ட அலுவலா் பாபு தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா்.

இந்த 40 குடும்பங்களுக்கும் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT