கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருட்டு

DIN

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை புலியகுளம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (30), தனியாா் நிறுவன ஊழியா்.

இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு வெள்ளிக்கிழமை சென்று நகைகளை அடமானம் வைத்து ரூ.2.80 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பக்கவாட்டு பெட்டியில் வைத்துள்ளாா்.

பின்னா் அவா் வெள்ளலூா் சாலை, சித்தனாபுரத்தில் உள்ள காா் ஷோரூம் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் பணத்தை காணவில்லையாம்.

இது தொடா்பாக, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கணேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்: 12 ராசிக்கும்!

SCROLL FOR NEXT