கோயம்புத்தூர்

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

DIN

ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் ராமநாதபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சென்னிமலைப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். விவேகானந்தனுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமதி என்ற பெண் தலைமறைவானதையடுத்து போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT