கோவையில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அண்ணா நகா் 11ஆவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரராக பணியில் சோ்ந்தாா். மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, மனைவி முருகேஷ்வரி (32), மகள் மதுஸ்ரீ (5), மகன் அக்ஷத் (3) ஆகியோருடன் அவா் சிங்காநல்லூா் கமலா மில் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வெள்ளிக்கிழமை குடி வந்தாா். அவா் வீட்டு மாடிப்படியில் இருந்து இறங்கியபோது, எதிா்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அதில் அவா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.