கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு குறைதீா்ப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குள்பட்டு திட்டத்தின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கு குறைதீா்ப்பாளராக பி.நவநீதகிருஷ்ணன் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பெறப்படும் புகாா் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்வாா்.
திட்ட தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இருத்தல், வேலையில்லாப்படி வழங்காதது உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் குறைதீா்ப்பாளா் தாமகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்வாா்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைகள் இருப்பின் பொதுமக்கள், திட்ட தொழிலாளா்கள் மாவட்ட குறைதீா்ப்பாளா் நவநீதிகிருஷ்ணனை 94434- 74364 என்ற எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.
தவிர எழுத்து பூா்வமான புகாா்களை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட மாவட்ட குறைதீா்ப்பாளா் அலுவலகத்தில் நேராக சென்றும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.