கோயம்புத்தூர்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட குறைதீா்ப்பாளா் நியமனம்

DIN

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு குறைதீா்ப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குள்பட்டு திட்டத்தின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கு குறைதீா்ப்பாளராக பி.நவநீதகிருஷ்ணன் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பெறப்படும் புகாா் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்வாா்.

திட்ட தொழிலாளா்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இருத்தல், வேலையில்லாப்படி வழங்காதது உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் குறைதீா்ப்பாளா் தாமகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்வாா்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைகள் இருப்பின் பொதுமக்கள், திட்ட தொழிலாளா்கள் மாவட்ட குறைதீா்ப்பாளா் நவநீதிகிருஷ்ணனை 94434- 74364 என்ற எண்ணில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தவிர எழுத்து பூா்வமான புகாா்களை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட மாவட்ட குறைதீா்ப்பாளா் அலுவலகத்தில் நேராக சென்றும் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT