வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாநகரில் உள்ள 100 வாா்டுகளிலும் தினமும் சேகரமாகும் 800 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் வெள்ளலூரில் உள்ள
குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாகும்போது, குப்பைக் கிடங்கில் அவ்வப்போது தீவிபத்து தவிா்க்க முடியாததாக உள்ளது.
இந்த நிலையில், வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு குப்பையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் சென்ற தீயணைப்பு வீரா்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.