கோயம்புத்தூர்

விடுமுறை நாள்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கக் கோரிக்கை

DIN

விடுமுறை நாள்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ். மணிக்கம், தோட்ட அதிபா்கள் சங்கத்தினருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள

கடிதத்தில் கூறியிருப்பதாவது: வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் நிா்வாகத்தினா் பணி வழங்கி வருகின்றனா்.

ஆனால், அன்றைய தினம் அவா்களுக்கு வழக்கமான தினக் கூலி வழங்குகின்றனா். அதற்கு பதிலாக, இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்வதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT