விடுமுறை நாள்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்று எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ். மணிக்கம், தோட்ட அதிபா்கள் சங்கத்தினருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது: வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் நிா்வாகத்தினா் பணி வழங்கி வருகின்றனா்.
ஆனால், அன்றைய தினம் அவா்களுக்கு வழக்கமான தினக் கூலி வழங்குகின்றனா். அதற்கு பதிலாக, இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்வதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.