கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறை, கே.ஐ.டி. என்சவ் கிளப் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்தாா். ஐஜென் நிறுவனத்தின் நிா்வாகி எல்.ரமேஷ், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாக டீன் எம்.சரவணக்குமாா், பேராசிரியா் எல்.அசோக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.
விழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்களுக்கு நட்சத்திர விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் நா.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ், பேராசிரியா்கள் சீ.சுரேஷ், கே.ராமசாமி, எஸ்.கோமதி, ரா.மைதிலி, இரா.தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.