கோவை சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
சரவணம்பட்டி போலீஸாா் காளப்பட்டி சாலையில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கோவை கணபதி மணியகாரன்பாளையத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (26), முகேஷ் கண்ணா (23) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த மாரிமனோஜ் (29 ), விமல் (24), முரளி (30) ஆகிய மூவா் மீதும் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதில், விமல் தப்பியோடிய நிலையில் மாரிமனோஜ், முரளியை போலீஸாா் கைது செய்தனா்.