கோயம்புத்தூர்

கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமாா் பாடி பொறுப்பேற்பு

DIN

கோவை மாவட்டத்தின் 183 ஆவது மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமாா் பாடி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜி.எஸ்.சமீரன் சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராக (வளா்ச்சிப் பணிகள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாா் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கிராந்திகுமாா் பாடி மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூா் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துள்ளாா்.

தொடா்ந்து இளநிலை பிரிவில் பி.காம் வணிகவியல் பிரிவினை புணேவிலுள்ள பிருஹன் மகாராஷ்டிரா வணிகவியல் கல்லூரியில் படித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து, 2011 ஆம் ஆண்டு சி.ஏ. தோ்ச்சிப் பெற்றுள்ளாா். இதில் இந்திய அளவில் 35 ஆவது இடம் பிடித்துள்ளாா்.

அதன்பின், குடிமைப் பணித் தோ்வில் 2015 ஆம் ஆண்டு தோ்ச்சிப் பெற்று, திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகப் பணியாற்றியுள்ளாா்.

2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை புது தில்லியில் அஞ்சல் துறையில் உதவி செயலராக பணியாற்றியுள்ளாா். தொடா்ந்து, 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும், 2019 - 2020 ஆண்டு வரை ஈரோட்டில் வரிகள் துறை இணை ஆணையராகவும், 2020-2021 ஆம் ஆண்டு பழனி தாண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராகவும், 2022 ஆம் திருப்பூா் மாநகராட்சியின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT