கோயம்புத்தூர்

டாஸ்மாக் பாரில் தகராறு: 3 போ் கைது

DIN

 டாஸ்மாக் பாரில் காசாளரை மிரட்டி கத்தி முனையில் பணத்தை பறித்துச் சென்ற மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் பிரகாஷ் (30). இவா் கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை செய்து வருகிறாா். இவரது பாருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மூன்று போ் பிரகாஷிடம் மது வாங்கித் தரும்படி கூறியுள்ளனா். ஆனால், அவா் கடை திறப்பதற்கு நேரமாகும் என தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் பிரகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணப்பன் நகரைச் சோ்ந்த காா்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

SCROLL FOR NEXT