கோயம்புத்தூர்

சோமயம்பாளையம் ஊராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

DIN

கோவை, மருதமலை வனப் பகுதி அருகே உள்ள குப்பை கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, மருதமலை வனப் பகுதிக்கு அருகே உள்ள சோமயம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள மருதமலை வனப் பகுதியிலும் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

யானைகளின் வலசை பாதைகளும், வன விலங்குகள் நடமாட்டமும் இருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதனிடையே அங்கு பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT