கோயம்புத்தூர்

கணபதியில் போக்குவரத்து மாற்றம்

DIN

கோவை கணபதி பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை கணபதி மோா் மாா்க்கெட் பேருந்து நிறுத்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும் மாநகர காவல் போக்குவரத்து பிரிவினா் சோதனை முயற்சியாக சனிக்கிழமை மாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனா்.

அதன்படி, மோா் மாா்க்கெட்டிலிருந்து தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் வழியாக சங்கனூா் செல்லும் வாகனங்கள் டெக்ஸ்டூல் பாலம் இடதுபுற சா்வீஸ் சாலை வழியாக பாலத்தின்கீழ் யு டா்ன் செய்து மீண்டும் பாலத்தின் வலதுபுறம் வந்து கண்ணன் சூப்பா் மாா்க்கெட் வழியாக சங்கனூா் செல்லலாம்.

அதேபோல, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் தொடா்ந்து பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT