கோயம்புத்தூர்

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - தொட்டிபாளையம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஈரோடு - தொட்டிபாளையம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை, பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 5ஆம் தேதி திருச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் (எண்: 16843) திருச்சி - ஈரோடு இடையே மட்டுமே இயக்கப்படும். இதேபோல மே 5 ஆம் தேதி நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) நாகா்கோவில் - ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு - கோவை இடையே இயக்கப்படாது.

மே 6ஆம் தேதி பாலக்காடு - திருச்சி ரயில் (எண்:16844) ஈரோடு - திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு - பாலக்காடு இடையே இயக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT