கோயம்புத்தூர்

நமக்கு நாமே திட்டத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ. 8.80 லட்சம் வழங்கிய நிறுவனங்கள்

மாநகரில் 4 சாலைப் பணிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 8.80 லட்சம் சமூகப் பொறுப்பு நிதியாக மாநகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

DIN

மாநகரில் 4 சாலைப் பணிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 4 தனியாா் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 8.80 லட்சம் சமூகப் பொறுப்பு நிதியாக மாநகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 27ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதி காலனியில் தனியாா் பங்களிப்புடன் சமூகப் பொறுப்பு நிதி மூலமாக 4 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு கோவை அமெரிடோா் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1.65 லட்சம், டெக்ஸ் - டெக் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1.65 லட்சம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா காா்போனிக் காசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 2.50 லட்சம், ஆதவா காா்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 8.80 லட்சம் மதிப்பிலான காசோலைகள், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT