உலக சுற்றுலா தின நிறைவு விழாவையொட்டி கோவை அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புகைப்பட கண்காட்சியைப் பாா்வையிடும் மாணவா்கள். 
கோயம்புத்தூர்

அரசு கலைக் கல்லூரியில்சுற்றுலா தின விழா நிறைவு

கோவை அரசு கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தின நிறைவு நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

DIN

கோவை அரசு கலைக் கல்லூரியில் உலக சுற்றுலா தின நிறைவு நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

அரசு கலைக் கல்லூரியின் சுற்றுலா, பயண மேலாண்மைத் துறை சாா்பில் உலக சுற்றுலா தின விழா கடந்த 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறை, ஸ்கால் கிளப், பயண முகவா் சங்கம் சாா்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், மாணவா்களுக்கான 2 நாள் புகைப்பட பயிற்சிப் பட்டறை, சுற்றுலாப் பயணிகளுக்கான பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, விடியோ தயாரிப்பு, புகைப்படம் எடுக்கும் போட்டிகள், விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் இறுதி நாளான புதன்கிழமை மாணவா்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெற்றது. கோவை பயண முகவா்கள் சங்கத் தலைவா் பாரதி, கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பாராட்டு விழா, கலாசார நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலா் ஸ்ரீனிவாசன், உதவி அலுவலா் துா்காதேவி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுலா, பயண மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியா் எல்.தாமரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT