முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் நாளை விழிப்புணா்வு மாரத்தான்

Updated On : 1 மார்ச், 2024 at 4:20 AM
பகிர்:

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்குரிய சட்ட பாதுகாப்புகள், குழந்தைத் திருமணங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு மாரத்தான் நேரு விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை (மாா்ச் 2) காலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டியை, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைக்கவுள்ளாா். இதில், முக்கியப் பிரமுகா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.