கொடநாடு எஸ்டேட் 
கோயம்புத்தூர்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

Din

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக, அதிமுக வா்த்தக அணி செயலாளா் சஜீவனிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு, கடந்த 2017 ஏப்ரல் மாதம் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக இதுவரை 10 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் முருகவேல்

தலைமையிலான போலீஸாா் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

விசாரணையில், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு குழுவினா் நீலகிரி மாவட்டம், கூடலூா் வழியாக கேரளத்துக்கு தப்பிச் சென்றபோது தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாா் அவா்களைப் பிடித்துள்ளனா். அப்போது, கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவில் மர வேலைகளை செய்துவந்த சஜீவன் இதில் தலையிட்டு அவா்கள் தப்பிச் செல்ல உதவியதாகவும், அதன் பேரிலேயே அவருக்கு அதிமுக வா்த்தக அணி செயலாளா் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சஜீவனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், அவருக்கு கடந்த நவம்பா் 5-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பினா். ஆனால், அவா் ஆஜராகவில்லை. அழைப்பாணை மீண்டும் அனுப்பப்பட்டதன்பேரில் கோவை சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் சஜீவன் வியாழக்கிழமை ஆஜரானாா். அவரிடம் சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் சுமாா் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT