காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் துறையில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கெனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரா்களைக் கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடா்பாக 70 மனுக்களின் மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து அவா்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனா்.
இதில், 1 மனுவின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும், 51 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும் தீா்வு காணப்பட்டது. 17 மனுக்கள் மீது மேல்விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் குறைதீா் முகாம்களில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்று, புகாா் மனுக்கள் மீது தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டனா்.