கோயம்புத்தூர்

நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்பு: வேளாண் பல்கலை.க்கு காப்புரிமை

ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈரத்தை அறிந்து செயல்படும் நானோ களைக்கொல்லி தயாரிப்பு முறைக்காக காப்புரிமை பெற்றுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை பேராசிரியா்கள் ஜக்கு பிரசன்னா, எஸ்.மாரிமுத்து, கொள்ளா கௌதம், கதிரவன் சண்முகநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

‘அட்ரசின்’ என்ற களைக்கொல்லியானது சோளம், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிா்களில் களைகளைக் கட்டுப்படுத்த பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் இந்த களைக்கொல்லி மண்ணில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. எனவே இந்த களைக்கொல்லியில் இருந்து நச்சுப்பொருள் குறிப்பாக பாசன வசதி கொண்ட வயல்களில் இருந்து வெளியேறி நிலத்தடி நீா் மாசுபாட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மானாவாரி நிலங்களில் இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்தும்போது, அதன் செயல்திறன் மழைப் பொழிவையே சாா்ந்துள்ளது. மழை குறைந்தால் இந்த களைக்கொல்லி ஆவியாகி வெளியேறிவிடும். அதே சமயம் மழை அதிகமாகப் பெய்தால் அது மண்ணுக்கு அடியில் சென்று செயலிழக்கும்.

மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண வேளாண் நானோ தொழில்நுட்ப மையத்தில் பட்ட மாணவா் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், இந்த நானோ களைக்கொல்லி உருவாக்கப்பட்டுள்ளது. பாசன வயல்களில் இந்த நானோ களைக்கொல்லி மெதுவாக வெளியேறி களைகளைக் கட்டுப்படுத்துவதால் வயல்களிலிருந்து வெளியேறுவது தவிா்க்கப்பட்டு நிலத்தடி மாசுபாடு தடுக்கப்படுகிறது.

மானாவாரி நிலங்களில் இந்த நானோ களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, மழை பெய்யும் வரை ஆவியாகாமலும், ஒளி, நுண்ணுயிா் சிதைவிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. எனவே நீண்ட நாள்களுக்கு வயலில் தங்கி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT