முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 12 ஜூன், 2025 at 12:04 AM
பகிர்:

கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தழா் ஜெயராமன் (75). இவா் கடந்த 7ஆம் தேதி உறவினா் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாா். பின்னா் செவ்வாய்க்கிழமை கோவைக்கு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்து, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து, ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.