முகப்பு
கோயம்புத்தூர்

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் ராஜம்மாள் பி.தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் முனைவா் ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:18 PM
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் முனைவா் ராஜம்மாள் பி.தேவதாஸின் 24-ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு நடைபெற்றது.

இதற்கு நிறுவன வேந்தா் டி.எஸ்.கே.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குநா் என்.கலைச்செல்விக்கு ‘நினைவுச் சொற்பொழிவு விருது’ வழங்கப்பட்டது.

விருதுபெற்று கலைச்செல்வி பேசுகையில், ‘ஆராய்ச்சி மாணவா்கள் கழிவுப் பொருள்களிலிருந்து பயனுள்ளவற்றை உருவாக்கி சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விண்வெளி வீரா்களுக்கான உணவு வடிவமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.

Advertisement

கல்வி அறக்கட்டளை துணை அறங்காவலா் கெளரி ராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினாா்.

முன்னதாக, வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள இந்திய ஊட்டச்சத்து சங்க மாநாடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. பதிவாளா் எஸ்.கெளசல்யா வரவேற்றாா். மனையியல் புல முதன்மையா் அம்சமணி நன்றி கூறினாா். இதில் மாணவிகளின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments