முகப்பு
கோயம்புத்தூர்

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 5:00 AM
ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். ~ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 10:12 PM

எரிவாயு உருளைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் வா்த்தக அணித் தலைவா் என். ஜாகீா் தலைமை வகித்தாா். செயலாளா் கே.சந்தோஷ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினா் கே,அஜய்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

எரிவாயு உருளை முறைகேட்டின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தட்டுப்பாடின்றி எரிவாயு உருளை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், என்.ஆா்.முருகேசன், என்.ஆறுசாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினா்கள், இடைக் குழு செயலாளா்கள், கட்சி உறுப்பினா்கள் மற்றும் வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.