முகப்பு
கோயம்புத்தூர்

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:28 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:07 PM

கோவை சின்னியம்பாளையம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் மானசா மாலிக். இவரது மனைவி மானசிபோலா (20). இவா்கள் இருவரும் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள துணிக்கடை விடுதியில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு ஆதித்யா என்ற 2 வயது மகன் இருந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனை விளையாட விட்டுவிட்டு மானசிபோலா வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா். அப்போது, எதிா்த்திசையில் வந்த தனது மாமியாரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் ஆதித்யாவைக் காணவில்லை.

Advertisement

மானசிபோலாவின் மாமியாா் சிறுவனைத் தேடிப் பாா்த்தபோது, வீட்டின் தரைத்தளத்தில் இருந்த 8 அடி ஆழ தண்ணீா்த் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அருகே வசிப்பவா்கள் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.