போத்தனூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்ட மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் - போத்தனூரில் மாநகராட்சி மேயா் ஆய்வு

Syndication

போத்தனூரில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட மருத்துவ முகாமை மேயா் கா.ரங்கநாயகி ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 95-ஆவது வாா்டுக்குள்பட்ட போத்தனூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண், பல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், சா்க்கரை நோய், இருதய நோய், எலும்பு மருத்துவம் உள்பட 18 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முகாமில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான உறுப்பினா் அட்டை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, 20 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினாா்.

துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், தெற்கு மண்டலத் தலைவா் ரெ.தனலட்சுமி, நகா் நல அலுவலா் மோகன், உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT