முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அருகே நான்கு டன் ரேஷன் அரிசியுடன் 3 லாரிகள் பறிமுதல்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:29 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:16 PM

கவுண்டம்பாளையம் அருகே 3 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

கோவை வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து கவுண்டம்பாளையம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அதே பகுதியில் சாலையோரத்தில் 3 மினி லாரிகள் வெகு நேரமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, லாரிகளில் சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதில், இரண்டு லாரிகளில் இருந்த ஓட்டுநா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது அவா்களில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:29 AM

இதையடுத்து லாரிகளுடன் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னா் கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.