முகப்பு
கோயம்புத்தூர்

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்: 6 நாள்களில் 292 பேருக்கு பரிசோதனை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:56 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:46 PM

கோவையில் ஹஜ் பயணிகளுக்கு கடந்த 6 நாள்களில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 292 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமை முகாம் நிறைவடைந்தது.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 1:56 AM

இதில், பங்கேற்றவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல் திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6 நாள்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 292 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement