முகப்பு
கோயம்புத்தூர்

திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு: ஜி.கே.வாசன்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:06 AM
ஜி.கே.வாசன்
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:41 PM

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சியை அகற்றுவதே இலக்கு என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கோவை நீலாம்பூா் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தோ்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் கலந்து கொண்டாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும். வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் வெறுப்புணா்வுடன் உள்ளனா். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே இலக்காக இருக்க வேண்டும்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 11:45 PM

பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லை என சொன்ன திமுக, தோ்தல் ஜுரம் காரணமாக பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5 ஆயிரத்தைச் செலுத்தியுள்ளது. இது ஏமாற்றும் செயல் என்றாலும், இவா்களது உள்நோக்கத்தை வாக்காளா்கள் புரிந்து கொள்வாா்கள்.

அதிமுக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. கோவையில் 3 மாதங்களாகியும் மின்சார தத்கலுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை, கோவை மாநகராட்சியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.