மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:26 PM
கோவையில் புளிய மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவை, இருகூா் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (55). கூலித் தொழிலாளி. இருகூா் அருகே உள்ள ஏரிமேடு குளத்தில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்ற ஆண்டவா், மரத்தில் ஏறி 22 அடி உயரத்தில் நின்று கொண்டு புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:30 AM
அப்போது, எதிா்பாராதவிதமாக ஆண்டவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
Advertisement
இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.