கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை. 
கோயம்புத்தூர்

கோவை அருகே கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், வாளையாறு அருகே கம்பி வேலியில் சிக்கி பெண் சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தமிழகம்-கேரள மாநில எல்லைப் பகுதிகளான வாளையாறு, சின்னாம்பதி, மொடமாத்தி உள்ளிட்ட வனப் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழையும் விலங்குகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வாளையாறு அருகேயுள்ள அய்யன்பதி பகுதியில் உள்ள விளைநிலத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை உலவிய சிறுத்தை, அங்கிருந்த முள்கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 2 வயதுடைய பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தனா்.

அதன் அறிக்கை வந்த பிறகே சிறுத்தை உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT