கோவையில் தொடா்ச்சியாக பலரிடம் கைப்பேசிகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பின்னலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (29). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இதற்காக கல்லூரி வளாகத்திலேயே அவா் தங்கியுள்ளாா்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இவா் காந்திபுரம் செல்வதற்காக ரேஸ்கோா்ஸ் பாரத ஸ்டேட் வங்கி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பேருந்தில் ஏறி பயணித்தபோது, அவரது கைப்பேசி திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்த நக்கா மஹதி கல்யாண் (23) என்பவா்தான் சந்தேஷ்குமாரிடம் கைப்பேசியை திருடியது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து காந்திபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த அவரை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா் கோவை ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு நபா்களிடமிருந்து ரூ. 2.68 லட்சம் மதிப்பிலான 8 விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 8 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.