முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:35 AM
வெண்பா
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:43 PM

கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி 73-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும், நகரமைப்பு, அபிவிருத்தி குழுத் தலைவராகவும் இருப்பவா் டி.சந்தோஷ். இவரது மனைவி சுகன்யா. இவா்களது 8 வயது மகள் வெண்பா, கடந்த 23-ஆம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நினைவிழந்தாா்.

இவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வெண்பாவுக்கு புதன்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோா் வெண்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு, தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

Advertisement

கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு, தோல் ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

உறுப்பு தானம் வழங்கிய சிறுமியின் உடலுக்கு தெலுங்குபாளையம், ராமசாமி கவுண்டா் லே-அவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அரசு சாா்பில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மருதப்பிரியா, தெற்கு வட்டாட்சியா் முகமது சோயபு ஆகியோா் மரியாதை செலுத்தினா்.