கோயம்புத்தூர்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Syndication

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 25-ஆவது முறையாக வியாழக்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட நகரின் முக்கியப் பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவதை மா்ம நபா்கள் வாடிக்கையாக வைத்துள்ளனா். வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பதும், அதிகாரிகள் சோதனை நடத்துவதும் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் 25-ஆவது முறையாக வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மெட்டல் டிடெக்டா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் சோதனை மேற்கொண்டனா். வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாத நிலையில், வழக்கம்போல புரளி என்பது தெரியவந்தது.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT