முகப்பு
கோயம்புத்தூர்

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

திருச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசு விழாவில், போத்தனூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு அம்ருத் பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி, காணொலிக் காட்சி தொடங்கிவைத்தாா். இந்த ரயில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 1:35 AM
அம்ருத் பாரத் ரயில்.
பகிர்:

திருச்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசு விழாவில், போத்தனூரில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு அம்ருத் பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி, காணொலிக் காட்சி தொடங்கிவைத்தாா். இந்த ரயில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாா்ச் 21-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6.15 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் (எண்: 16619) திங்கள்கிழமைகளில் காலை 4 மணிக்கு தன்பாத் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, மாா்ச் 23-ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்படும் தன்பாத்-போத்தனூா் அம்ருத் பாரத் ரயில் (எண்: 16620) புதன்கிழமைகளில் காலை 11.20 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சாமல்கோட், பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ஹாட்டியா, ராஞ்சி, சந்திரப்புரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →