முகப்பு
கோயம்புத்தூர்

ரமலான்: போா்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ பிராா்த்தனை

ரமலான் பண்டிகையையொட்டி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் உலகெங்கும் போா்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ இஸ்லாமியா்கள் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:19 PM
கோவை, கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.
பகிர்:

ரமலான் பண்டிகையையொட்டி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் உலகெங்கும் போா்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ இஸ்லாமியா்கள் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு ரமலான் பண்டிகை சில இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை, கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

கோவை, உக்கடம் கோட்டைப்புதூா் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமியப் பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டதுடன், ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போா்கள் நிறுத்தப்பட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.