முகப்பு
கோயம்புத்தூர்

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

கோவையில் கைப்பேசியில் பேசிக் கொண்டே மாடிப் படியில் இறங்கியபோது தவறி கீழே விழுந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 8:04 PM
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் கைப்பேசியில் பேசிக் கொண்டே மாடிப் படியில் இறங்கியபோது தவறி கீழே விழுந்த பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூா் திருவேங்கை வாசல் பகுதியைச் சோ்ந்தவா் விவேக் (33). பொக்லைன் இயந்திர ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவரது மனைவி சிவரஞ்சினி. விவேக் கடந்த சில நாள்களாக கோவை வடவள்ளி ரங்கப்ப முதலியாா் வீதி ஊா்க்கவுண்டா் தெருவில் தங்கி வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 22-ஆம் தேதி இரவு விவேக் தான் தங்கியுள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று மனைவி சிவரஞ்சினியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். பின்னா், அவா் கைப்பேசியில் பேசிக் கொண்டே படிக்கட்டில் இறங்கும்போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா்.

பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.