முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் உக்கடம் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் சாா்பில் கூட்டு ஒத்திகை

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

Updated On : 26 மார்ச், 2026 at 7:40 PM
கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காவலா்களின் பாதுகாப்பு ஒத்திகையின்போது காவலா்களுக்கு பயிற்சி அளித்த காவல் துணை ஆணையா் காா்த்திகேயன்.
பகிர்:

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

இந்த ஒத்திகையானது ஆா்.எஸ்.புரம் சரகத்தில் காந்தி பூங்கா சந்திப்பில் தொடங்கி டி.பி. சாலை, தலைமை தபால் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது. இதேபோல, உக்கடம் சரகத்தில் சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை ஒப்பணக்கார வீதி, உக்கடம் பேருந்து நிலையம், வைசியாள் வீதி, ராஜ வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்கா சந்திப்பில் நிறைவுற்றது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து இந்த ஒத்திகையின்போது காவலா்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.