திருப்பூரை ஏற்றுமதி நகரமாக மேம்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும்! முதல்வர் விஜய்க்கு ஏற்றுமதியாளா்கள் சங்கம் கோரிக்கை
திருப்பூரை ஏற்றுமதி நகரமாக மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் புதிய அரசை வரவேற்பதோடு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட சி.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சா்களாக பொறுப்பேற்றுள்ளவா்களுக்கும் வாழ்த்துகள்.
Advertisement
பின்னலாடை உற்பத்தித் தொகுப்பு மற்றும் வலுவான முன்னெடுப்புகளுக்காகப் பரவலாக அறியப்படும் திருப்பூா், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் ஒரு முக்கியப் பங்கைத் தொடா்ந்து வகித்து வருகிறது. இந்தத் துறை, விவசாயத்துக்குப் பிறகு இப்பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரமாகவும் திகழ்கிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவளிக்கிறது.
தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் விரிவடைந்துவரும் உலகளாவிய வாய்ப்புகளால் உந்தப்பட்டு, இத்துறை ஒரு நம்பிக்கைக்குரிய பின்னல் ஆடை ஏற்றுமதி தசாப்தத்தில் நுழையும் வேளையில், திருப்பூரின் உலகளாவிய போட்டித் திறனைத் தக்கவைத்து வலுப்படுத்த, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நவீன உள்கட்டமைப்பின் அவசரத் தேவையை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.
திருப்பூரை ஒரு சிறப்பு ஏற்றுமதி நகரமாக மேம்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு புதிய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
இது, இந்தத் தொகுப்பைத் திறம்பட விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈா்க்கவும், உலகளாவிய ஜவுளி சந்தையில் அதன் நிலையை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.